சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைகளுக்காகவும், அவர்களுக்கு கிடைக்கப்பெறாத நீதிக்காகவும் தீவிர செயலாற்றி வரும் குறிப்பிட்ட சிலரில் நானும் ஒருவன். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைவாசிகளின் விடுதலைக்காக எல்லா வகையிலும் போராடி வருபவன்.
முஸ்லிம் சமுதாயத்திற்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் சொத்து சகோ. CMN சலீம் அவர்களிடம் இரண்டரை ஆண்டு காலம் அவர் இயக்கிய வெற்றிப்பாதை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் துணை இயக்குனராக பணி புரிந்தவன். கடந்த 2007 ஆம் ஆண்டு சிறையில் வாடும் அப்பாவி சிறைவாசிகளின் குடும்பங்களின் நிலையை ஆவணப்படமாக பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறேன். என் கல்லூரி காலங்களில் சிறைவாசிகளின் வழக்கு நிதிக்காக தமிழகம் முழுவதும் சுற்றி வந்த ஒரு சக மனித உரிமை போராளி. எழுத்து, பேச்சு, ஆவணப்படம், அப்பாவி சிறைவாசிகளின் விடுதலை என தொடர்ச்சியாக இயங்கி வருகிறேன்.
எனது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் (பூவை) கிராமம். ஆரம்பப்பள்ளி அம்பகரதூரிலும், மேல்நிலைக்கல்வி சென்னை கிரசண்ட் பள்ளியிலும் படித்தேன். பிறகு பொறியியல் கல்வியை திருச்சி MIET கல்லூரியிலும், BA பொது நிர்வாகப்படிப்பை மெட்ராஸ் பல்கலைகழகத்திலும் முடித்துள்ளேன்.
97ம் ஆண்டு கோவை முஸ்லிம்களுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட படுகலைக்கெதிராக நீதி வழங்கப்படா நிலையில் என் இதயத்து வேதனைகளை பதிவதற்காய் ஆரம்பிக்கப்பட்ட ஓர் இணையதளம்